தமிழர் பகுதியில் 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு- கரடியனாறு பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவர்கள் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உணவு ஒவ்வாமை
இதன்போது, 50 இற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்து கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் ,பாதிக்கப்பட்ட மாணவர்களில் சிலர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.