சுவிட்சர்லாந்தில் வெப்பத்தைத் தணிக்க நீர் நிலைகளுக்கு செல்வோருக்கு ஒரு எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில் வெப்பத்தைத் தணிப்பதற்காக மக்கள் ஆறுகள் மற்றும் ஏரிகளை நோக்கி படையெடுத்துவருகிறார்கள்.
ஒரு எச்சரிக்கை
அப்படி வெப்பத்தைத் தணிக்க நீர் நிலைகளுக்கு செல்வோருக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, நீர் நிலைகள் இன்னமும் குளிர்ச்சியாகத்தான் உள்ளன.
விடுமுறையிலிருக்கும் பள்ளிப் பிள்ளைகள் உட்பட ஏராளமானோர் ஆறுகள் மற்றும் ஏரிகளை நோக்கி படையெடுத்துவரும் நிலையில், தண்ணீரில் இறங்கிய பலர் வேகமாக வெளியேறிவிட்டார்கள்.
காரணம், தண்ணீரின் வெப்பநிலை இன்னமும் 15 டிகிரியாகத்தான் உள்ளது. ஆகவே, ஆறுகள் மற்றும் ஏரிகளுக்குச் செல்லும் மக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.