நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு

சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களிற்கான இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்ட நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வுகள்
நாளைய தினம் (06.05.2025) நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்களிற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்ட நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (05.05.2025) முறையே காலை 09. 00 மற்றும் காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.|
இந் நிகழ்வில் மேலதிக அறிவுறுத்தல்களை சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்களுக்கு பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் இ.சசீலன் அவர்களால் வழங்கப்பட்டது.