இலங்கை – வியட்நாம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடையே பல துறைகள் தொடர்பான நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவோங் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.
வியட்நாம் ஜனாதிபதி மாளிகையில் இன்று (05) இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற இருதரப்பு கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உடன்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.