;
Athirady Tamil News

நடந்து சென்ற சிறுமிக்கு எமனான லொறி

0

லொறி ஒன்று, வீதியைக் கடந்து சென்ற சிறுமி மீது மோதி விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதெணிய – அநுராதபுரம் வீதியில், நெலும்பத்வெவ சந்தி அருகே, இந்த வித்து இடம்பெற்றுள்ளது.

நேற்று (05) மாலை இந்த விபத்தில் படுகாயமடைந்த சிறுமி, அம்பன்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்த சிறுமி 8 வயதுடைய அம்பன்பொல பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். சிறுமியின் சடலம் அம்பன்பொல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை அம்பன்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.