;
Athirady Tamil News

சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கை தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வூட்டும் தேசிய நிகழ்ச்சி திட்டம் -2025

0

சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கை தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வூட்டும் தேசிய நிகழ்ச்சி திட்டம்
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தலைமையில் இன்றைய தினம் (08.05.2025) பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர் கூடத்தில் காலை 9.00 மணிக்கு நடைபெற்றது
மாவட்டச் செயலககத்தின் சிறுவர் பிரிவின் ஒழுங்கமைப்பில், சிறுவர் பாதுகாப்பும் சட்டங்களும், சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கைகளை தெளிவுபடுத்தல் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கடமைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டல் இடம் பெற்றது.
இச் செயலமர்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அலுவலர்கள், யாழ் மாவட்ட உத்தியோகத்தர் ஆகியோா் கலந்து கொண்டதுடன், 70ற்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.