;
Athirady Tamil News

வடமாகாண ஆளுநர் தலைமையில் காணி பிரச்சனைகளுக்கான இறுதி தீர்வுகள் குறித்து நடமாடும் சேவை.

0

வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் நீண்டகாலமாக தீர்க்கபடாமல் இருந்துவருகின்ற காணிப்பிரச்சனைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கான பொதுமக்கள் நடமாடும் சேவையில் கலந்துகொண்டிருந்தார்.

காணி பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ள கரைச்சி,கண்டாவளை,பூநகரி ஆகிய 3 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள மக்களுடனான சந்திப்பினை மேற்கொண்ட ஆளுநர் அவர்கள் காணிப்பிணக்குகளுக்குரிய தீர்வினை பெற்றுக்கொடுக்கும் வகையில் உரிய தரப்பினரோடு கலந்துரையாடலை நடாத்தியிருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.