ஊசி மூலம் அதிகளவு போதை இளம் குடும்பஸ்தர் மரணம்

ஊசி மூலம் அதிகளவு போதைப்பொருளைச் செலுத்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார். சாவகச்சேரி பிரிவுக்குட்பட்ட மட்டுவிலில் நேற்றுமுன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 27 வயதான நபரே உயிரிழந்தவராவார்.
நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு அவரை காணாது வீட்டார் தேடியபோது இரவு 10.30 மணியளவில் தாயார் வீட்டுக்கு பின்புறமாக அசைவற்றுக் காணப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் நேற்று திங்கட்கிழமை (12) யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.|
பிரேதப் பரிசோதனையில் அளவுக்கதிகமாக போதைப் பொருளை ஊசி மூலம் செலுத்தியதால் மரணம் சம்பவித்ததாக அறிக்கையிடப்பட் டுள்ளது.