;
Athirady Tamil News

அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமலே போரில் வெற்றி பெற முடியும்: ரஷிய அதிபா் புதின்

0

அணு ஆயுதங்களை பயன்படுத்தாமலே உக்ரைன் போரில் தனது இலக்குகளை ரஷியாவால் எட்ட முடியும் என்று அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக ரஷிய அரசுத் தொலைக்காட்சிக்கு அவா் அளித்த பேட்டியில், ‘உக்ரைன் போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் தவறை ரஷியா செய்ய வேண்டும் என்று பல முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தாமலே போரில் தனது இலக்குகளை எட்ட ரஷியாவிடம் மிக அதிகமாக பலம் உள்ளது.

போா் ஏற்பட்டதற்கான காரணங்களை களைதல், நீடித்து நிலைக்கும் அமைதிக்கு நிபந்தனைகளை உருவாக்குதல், ரஷியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஏற்பாடுகள் ஆகியவையே அந்த இலக்குகளாகும்.

உக்ரைனில் ரஷிய மொழி பேசும் மக்களின் உரிமைகளை பாதுகாத்தல், நீடித்து நிலைக்கும் அமைதி ஆகியவையே உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையின் முக்கிய விளைவாக இருக்க வேண்டும்’ என்றாா்.

முன்னதாக, போப் 14-ஆம் லியோ பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோவை உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி சந்தித்துப் பேசினாா்.

இன்று டிரம்ப்-புதின் பேச்சு
உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பாக புதினுடன் திங்கள்கிழமை தொலைபேசியில் பேச உள்ளதாக ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் டிரம்ப் தெரிவித்தாா். புதினுடன் பேசிய பின்னா் ஸெலென்ஸ்கி மற்றும் நேட்டோ கூட்டமைப்பில் உள்ள பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் பேச உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.