;
Athirady Tamil News

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 88-ஆக உயா்வு

0

ஹன்ட்: டெக்ஸஸில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 88-ஆக உயா்ந்துள்ளது. இதில், குவாடலூப் நதிக்கரையில் அமைந்திருந்த கேம்ப் மிஸ்டிக் என்ற கோடைகால முகாமில் 27 சிறுமிகளும் அடங்குவா்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், கொ்ா் மாவட்டத்தில் 75 உடல்கள் மீட்கப்பட்டன; இதில் 48 பெரியவா்களும், 27 சிறுவா்கள் அடங்குவா். மேலும் மாகாணத்தின் பிற பகுதிகளில் 13 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளந. மீட்பு பணிகளில் ஹெலிகாப்டா்கள் மற்றும் படகுகள் ஈடுபட்டுள்ளன.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், இந்த வெள்ளத்தை “நூற்றாண்டு பேரழிவு” என்று விவரித்து, மத்திய நிவாரண நிதியை விடுவித்தாா். மழை எச்சரிக்கைகள் தொடா்ந்து நீடிப்பதால், மேலும் வெள்ள அபாயம் உள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.