;
Athirady Tamil News

கணவனை கோடரியால் கொன்றுவிட்டு பிள்ளைகளுடன் பொலிசில் சரணடைந்த மனைவி

0

தனது கணவரை கோடரியால் வெட்டி கொலை செய்துவிட்டு மனைவி , மூன்று குழந்தைகளுடன் பொலிஸில் சரணடைந்ததாக கெபத்திக்கொல்லாவ பொலிஸ் நிலையகம் தெரிவித்துள்ளது.

கெபத்திக்கொல்லாவ பொலிஸ் பிரிவில் உள்ள குருலுகமவைச் சேர்ந்த மூன்று குழந்தைகளின் தாய் (வயது 36 ) பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

உயிரிழந்தவர் கெபத்திக்கொல்லாவ வ, குருலுகம, உக்குவவைச் சேர்ந்த மூன்று குழந்தைகளின் தந்தையான உபாலி ஹேரத் (46) என்பவர் ஆவார்.

தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, ​​மனைவியை வாளால் தாக்க முயன்றுள்ளார்.

இதன்போது மனைவி கோடரியால் கணவனின் தலையில் தாக்கியதில், கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.