;
Athirady Tamil News

கடும் மின்னல் தாக்கம் ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

0

மத்திய, வடமேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும் அம்பாறை, அம்பாந்தோட்டை, மன்னார் மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கையானது இன்று (08) இரவு 11.00 மணி முதல் அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.