;
Athirady Tamil News

மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவுறுத்தல்

0

மாவீரர்களை நினைவுகூர்வதற்குத் தமிழ் மக்களுக்கு முழுச் சுதந்திரம் உள்ளது. இதை எவரும் மறுத்துரைக்க முடியாது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், மாவீரர் துயிலும் இல்லங்களில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர் நினைவேந்தல்
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“போர்க் காலத்தில் படையினரால் கைப்பற்றப்பட்ட காணிகளைத் தற்போதைய அரசு விடுவித்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக, மாவீரர் துயிலும் இல்லங்களில் நிலைகொண்டுள்ள இராணுவத்தையும் வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

துயிலும் இல்லங்களில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை வெளியேற்றுவதற்கு உரிய பொறிமுறைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் பாதுகாப்புச் செயலருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதற்குரிய நடவடிக்கைகள் விரைவில் இடம்பெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.