;
Athirady Tamil News

பின்லாந்தில் மீண்டும் பரவும் கொவிட் தொற்று; அச்சத்தில் மக்கள்

0

பின்லாந்தில் கொவிட் 19 தொற்றுகள் சமீபத்தில் அதிகரித்து வருவதாகச் அந்நாட்டு சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. வாரத்திற்கு சுமார் 200 தொற்றாளர்கள் உறுதி செய்யப்படுவதாக பின்லாந்து தகவல்கள் கூறுகின்றன.

இலையுதிர்காலத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனச் சுகாதாரம் மற்றும் நலன்புரி நிறுவனத்தின் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய வாரங்களில் வாரத்திற்கு சுமார் 200 ஆய்வக உறுதிப்படுத்தப்பட்ட தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன என அவர் கூறினார்.

இவை ஆய்வகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் மாத்திரமே. மேலும், உண்மையான தொற்றுகளுடன் ஒப்பிடும்போது இது மிகச் சிறிய அளவாகும். பெரும்பாலான கொவிட் தொற்றாளர்கள் வீட்டிலேயே இருப்பதாகவும் கொவிட் தொற்றுகள் நாடு முழுவதும் பரவி வருகின்றன என்று கூறலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், இந்த இலையுதிர்காலத்தில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது குறைவு என குறிப்பிட்ட அவர், அப்போது வாரத்திற்கு சுமார் 1,000 ஆய்வக உறுதிப்படுத்தப்பட்ட தொற்று வழக்குகள் பதிவாகின.

தற்போது பல்வேறு சுவாச வைரஸ்கள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன எனவும் சுகாதாரம் மற்றும் நலன்புரி நிறுவனத்தின் நிபுணர் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.