;
Athirady Tamil News

புனேவில் 2 லாரிகள் மோதி கோர விபத்து… நடுவில் சிக்கிய கார் – 8 பேர் உயிரிழப்பு

0

மும்பை,

மராட்டிய மாநிலம் புனேவின் நவாலே பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று 2 லாரிகள் மற்றும் ஒரு கார் மோதி கோர விபத்து ஏற்பட்டது. அந்த 2 லாரிகளுக்கு நடுவே கார் சிக்கிக் கொண்டது. விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்தில் லாரி தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இந்த விபத்தில் லாரி மற்றும் காரில் இருந்தவர்கள் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.