புதிய தேர்தல் ஆணையர் நாயகம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்
புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
முன்னாள் தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று தனது பதவியிலிருந்தும், அரச சேவையிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தார்.
2019 ஒக்டோபர் 16ஆம் திகதி தேர்தல் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட அவர், கடந்த 34 ஆண்டுகளாக அரச அதிகாரியாகப் பணியாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.