வட மாகாண பிரதி தொழில் ஆணையாளராக ஶ்ரீமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா நியமனம்!
வட மாகாண பிரதி தொழில் ஆணையாளராக ஶ்ரீமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில் திணைக்களத்தின் வட மாகாண பிரதி தொழில் ஆணையாளராக ஶ்ரீமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்கள் நேற்றைய தினம் ( நவம்பர் 26 ) யாழ்ப்பாணத்தில் உள்ள வட மாகாண தொழில் அலுவலகத்தில் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
இதேவேளை இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான இவர் கடந்த ஒக்ரோபர் 16 தொடக்கம் யாழ் மாவட்ட உதவி தொழில் ஆணையாளராக பணியாற்றி இன்று வட மாகாண பிரதி தொழில் ஆணையாளராக மாற்றம் பெற்றுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.