;
Athirady Tamil News

அமெரிக்காவில் 27 மாகாணங்களுக்கு அதி தீவிர பனிப்புயல் எச்சரிக்கை

0

அமெரிக்காவில் தற்போது 3-வது பனிப்புயலால் 5.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் குளிர்காலத்தில் கடும் பனிப்புயல்கள் தாக்கும். அமெரிக்காவில் பனிப்புயல் தாக்கி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 பனிப்புயல்கள் தாக்கின. தற்போது 3-வது பனிப்புயல் உருவாகி இருக்கிறது.

ஒரு அடி உயரத்திற்கு பனி
இந்த புதிய பனிப்புயல் அதி தீவிர பனிப்புயலாக மாறி உள்ளது. இந்த அதி தீவிர பனி புயலால் 5.5 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொலராடோ மாகாணத்தின் ராக்கி மலைப்பகுதியில் ஒரு அடி உயரத்திற்கு பனி விழுந்துள்ளது.

கன்சாஸ் சிட்டியில் 10 செ.மீ., அளவும், செயின்ட் லுாயிசில் 7 பனி செ.மீ., அளவும் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் வடமேற்கில் மோண்டானா முதல் கிழக்கு கடற்கரையில் உள்ள மைனே வரை 2,500 கி.மீ., நீளத்துக்கு 27 மாகாணங்களுக்கு அதிதீவிர பனிப்புயல் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.