;
Athirady Tamil News

38 நோயாளிகளிடம் அத்துமீறிய பிரித்தானிய மருத்துவர்; அதிர்ச்சியை உருவாக்கியுள்ள தகவல்

0

பிரித்தானியாவில் மருத்துவராக பணியாற்றிவந்த ஒருவர், 38 நோயாளிகளிடம் அத்துமீறியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இங்கிலாந்திலுள்ள பர்மிங்காமைச் சேர்ந்த நத்தானியேல் ஸ்பென்சர் (38) என்னும் மருத்துவர், 2017 முதல் 2021வரையிலான காலகட்டத்தில், 13 வயதுக்கு குறைவான பிள்ளைகள் முதல் 38 நோயாளிகளிடம் அத்துமீறியுள்ளார்.

அவர் மீது, பாலியல் தாக்குதல், வன்புணர்வுக் குற்றச்சாட்டுகள், 13 வயதுக்குக் குறைவான பிள்ளைகளிடம் அத்துமீறியது உட்பட 45 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பிரித்தானியாவில் மருத்துவராக பணி புரிய அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம், அதாவது, 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி, அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.