;
Athirady Tamil News

ஈரான் வான்வெளி… விமான நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் திடீர் அறிவுறுத்தல்

0

ஈரானுக்கு எதிராக அமெரிக்கத் தாக்குதல் அச்சுறுத்தல்கள் நடுவே, ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு முகமை, விமான நிறுவனங்களை ஈரானிய வான்வெளியைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

தவறாக அடையாளம்
தற்போதைய சூழ்நிலை மற்றும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கான சாத்தியக்கூறுகள் காரணமாக, ஈரானிய வான் பாதுகாப்பு அமைப்புகள் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதனால், தற்போது தவறாக அடையாளம் காணப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது என்றே ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், பல்வேறு வகையான ஆயுதங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளின் இருப்பு மற்றும் அவற்றின் சாத்தியமான பயன்பாடு, கணிக்க முடியாத ஈரான் அரசாங்கத்தின் பதிலடி நடவடிக்கைகள் மற்றும் தரை-வான் ஏவுகணை அமைப்புகள் (SAM) செயல்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆகிய அனைத்தும்,

அனைத்து உயரங்களிலும் மற்றும் விமானப் பயண மட்டங்களிலும் இயங்கும் பயணிகள் விமானங்களுக்கு அதிக ஆபத்தை உருவாக்குகின்றன என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வு தொடர்பான போராட்டங்கள் டிசம்பர் 28 அன்று ஈரானில் வெடித்த நிலையில், இது 1979-ல் இஸ்லாமியக் குடியரசு நிறுவப்பட்டதிலிருந்து மதத் தலைமைகளுக்கு எதிராக நடந்த மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்றாக உருவெடுத்தது.

இந்த நிலையில், நோர்வேயை தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, குறைந்தது 3,428 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அனைத்து வாய்ப்புகளும்
இது ஒரு முழுமையான குறைந்தபட்ச எண்ணிக்கையாக இருக்கலாம் என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களைத் தூக்கிலிடும் திட்டங்களைக் கைவிடாவிட்டால், ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதன்கிழமை வரை அமெரிக்கா மிரட்டி வந்தது.

ஆனால் அமெரிக்காவின் வளைகுடா நட்பு நாடுகளின் பிராந்திய விளைவுகள் குறித்த எச்சரிக்கைகளுக்குப் பிறகு, ட்ரம்ப் நிர்வாகம் தாக்குதலில் இருந்து பின்வாங்கியுள்ளது, இருப்பினும் வியாழக்கிழமை அனைத்து வாய்ப்புகளும் பரிசீலனையில் உள்ளதாக மீண்டும் மிரட்டல் விடுத்தது.

இதனிடையே, ஈரான் அரசாங்கம் அனைத்து திட்டமிடப்பட்ட தூக்கு தண்டனைகளையும் ரத்து செய்ததற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை நன்றி தெரிவித்தார்.

மேலும் பொதுமக்கள் மீதான் இந்த ஒடுக்குமுறை தொடர்ந்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்றும் ஈரானுக்கு அச்சுறுத்தல் விடுத்த அவர், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.