;
Athirady Tamil News

இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0

இந்தியாவின் வடமேற்கு காஷ்மீர் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,

சுமார் 35 கிலோமீற்றர் ஆழத்தில், 06 ரிக்டர் இந்த நிலநடுக்கம் அளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தநாட்டு நேரப்படி இன்று திங்கட்கிழமை (19) காலை 11.51 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளதுடன், இதுவரை எவ்வித சேதமும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

இருப்பினும், தொடர்புடைய பகுதியில் மேலும் நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு இந்திய தேசிய நிலஅதிர்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.