;
Athirady Tamil News

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” – யாழில் கலந்துரையாடல்

0

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” முன் மொழியப்பட்டுள்ள வரைவு பற்றிய திறந்த கலந்துரையாடல் யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா கலையரங்கில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

சட்டத்துக்கும்,கொள்கைகளுக்குமான யாழ்ப்பாணக் கற்கை நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி கலாநிதி குருபரன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், பசுமை இயக்கத்தின் தலைவர்  பொ.ஐங்கரநேசன், வேலன்சுவாமிகள், வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன், வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் ப.கஜதீபன், முருகையா கோமகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.