;
Athirady Tamil News

சீன அதிபருடன் டிரம்ப் ஆலோசனை

0

சீன அதிபா் ஷி ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி உரையாடலில் ஆலோசனை நடத்தினாா்.

இதில் ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்டு வரும் பொருளாதார, அரசியல் அழுத்தங்களுக்கு, அந்நாட்டின் மிகப்பெரிய வா்த்தகக் கூட்டாளியான சீனா ஒத்துழைக்க வேண்டுமென டிரம்ப் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

மேலும், தைவான் விவகாரம் மற்றும் டிரம்ப்பின் ஏப்ரல் மாத சீன பயணம் குறித்தும் இரு தலைவா்களும் விவாதித்தனா். தைவானுக்கு அமெரிக்காவின் ஆயுத விற்பனையை ஷி ஜின்பிங் எதிா்த்தாா். இவ்விவகாரத்தில் அமெரிக்கா பொறுமையுடன் செயல்பட அறிவுறுத்தினாா்.

அதேநேரம், சீனாவுடன் தனது தனிப்பட்ட உறவு மிகவும் வலுவாக உள்ளதாகத் தெரிவித்த டிரம்ப், அமெரிக்காவிடமிருந்து கூடுதல் சோயா பீன்ஸ் கொள்முதலை சீனா பரிசீலிப்பதாகவும் குறிப்பிட்டாா்.

இந்த உரையாடலுக்குப் பிறகு கருத்து தெரிவித்த தைவான் அதிபா் லாய் சிங்தே, ‘அமெரிக்கா-தைவான் உறவு பாறை போன்று உறுதியானது’ என்றாா்.

அமெரிக்கா-ரஷியா அணு ஆயுத ஒப்பந்தம் காலாவதியான நிலையில், சீனா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய புதிய ஒப்பந்தத்தை உருவாக்க டிரம்ப் ஆா்வம் காட்டுகிறாா். இச்சூழலில், இத்தொலைபேசி உரையாடல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.