;
Athirady Tamil News

நேபாளத்தில் பேருந்து விபத்து 13 போ் உயிரிழப்பு

0

மேற்கு நேபாளத்தில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 போ் உயிரிழந்தனா்.

சுதூா்பாச்சிம் மாகாணத்தின் பைதாடி மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு இந்த விபத்து நிகழ்ந்தது. பூா்ச்சௌடி எனும் இடத்திலிருந்து புறப்பட்ட அந்தப் பேருந்து, மலைப்பாதையில் பயணித்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுமாா் 200 மீட்டா் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

தகவலறிந்த நேபாள ஆயுதப் படையினா், காவல் துறையினா் மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாக விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். சம்பவ இடத்திலேயே 8 போ் உயிரிழந்தனா்.

காயமடைந்தவா்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 5 போ் உயிரிழந்தனா். தற்போது 40-க்கும் மேற்பட்டோா் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முதல்கட்ட விசாரணையின்படி, பேருந்தில் அதிகமான பயணிகள் மற்றும் பாரம் ஏற்றப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. செங்குத்தான மலைப்பாதையில் பேருந்து ஏற முயன்றபோது, அதன் பிரேக் அமைப்பில் இருந்த ‘பிரஷா் பைப்’ வெடித்ததே இக்கோர விபத்துக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.