;
Athirady Tamil News

10 வருட வரிவிலக்கு ; முதலீட்டை ஈர்க்க புதிய தீர்மானம்

0

சுற்றுலா, உற்பத்தி மற்றும் விவசாயத் துறைகளில் மூலோபாய அபிவிருத்தித் திட்டங்களுக்கான முதலீடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை வரிச்சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, 50 மில்லியன் டொலர் முதல் 300 மில்லியன் டொலர் வரையிலான முதலீடுகளுக்கு இந்த வரிச்சலுகைகள் வழங்கப்படவுள்ளன.

குறித்த முதலீட்டின் மூலம் குறைந்தது 50 உள்நாட்டு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய முதலீடுகளுக்கு 05 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை நிறுவன வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக, அத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான மூலதனப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் வரிச்சலுகைகள் வழங்கப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.