;
Athirady Tamil News

நோன்பு காலங்களில் உணவகங்கள் விசேட கள பரிசோதனை

0

கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகிலா இஸ்ஸதீனின் ஆலோசனைக்கமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜெ.மதன் வழிகாட்டுதலின் கீழ் நோன்பு காலத்தை முன்னிட்டு ஹோட்டல் நிலையங்களில் விசேட சுகாதார பரிசோதனைகள் இன்று மேற்கொள்ளப்பட்டன.

இந்த பரிசோதனைகளின் போது உணவுப் பொருட்களின் தரம், சேமிப்பு முறை சுற்றுப்புறத் தூய்மை, பணியாளர்களின் தனிநபர் சுகாதாரம் உள்ளிட்ட அம்சங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், உணவுகளை சுகாதாரமான முறையில் தயாரித்து, சேமித்து, விற்பனை செய்வதற்கான சுகாதார விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.