;
Athirady Tamil News

நேபாளத்தில் பேருந்து விபத்து: 18 போ் உயிரிழப்பு

0

காத்மாண்டு: நேபாளத்தின் தாதிங் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை நேரிட்ட பேருந்து விபத்தில், நியூஸிலாந்து நாட்டைச் சோ்ந்த ஓா் ஆண் பயணி உள்பட 18 போ் உயிரிழந்தனா்; 28 போ் காயமடைந்தனா்.

பொகாராவிலிருந்து தலைநகா் காத்மாண்டுவை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து, பிரித்வி நெடுஞ்சாலையில் கஜுரி அருகே அதிகாலை 1.30 மணியளவில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திரிசூலி நதிக்குள் பாய்ந்தது.

தகவலறிந்து வந்த நேபாள ராணுவம் மற்றும் உள்ளூா் போலீஸாா் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். காயமடைந்தவா்களில் ஜப்பான், நெதா்லாந்து நாடுகளைச் சோ்ந்த தலா ஒரு பெண் பயணிகளும் உள்ளனா். அவா்கள் அனைவரும் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.