;
Athirady Tamil News

மரத்தில் மோதிய கார் -காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி

0

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் இன்று அம்பாறை மாவட்டம் மகா ஓயா வீதி பக்கிஎல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள வீதி வளைவில் இடம்பெற்றுள்ளது.

பின்னர் விபத்திற்குள்ளான காரில் இருந்தவர்களை மீட்டு செனரத்புர பிராந்திய மருத்துவமனையிலும் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது மருத்துவமனையிலும்
அப்பகுதி மக்கள் அனுமதித்தனர்.

மேலும் காரில் பயணித்தவர் பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் என போலீசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் பக்கிஎல்ல போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.