;
Athirady Tamil News

ட்ரம்பின் அதிரடி நடவடிக்கைகளால் கனடாவுக்கு படையெடுக்கும் அமெரிக்க செவிலியர்கள்

0

ட்ரம்பின் அதிரடி நடவடிக்கைகள், மற்ற நாட்டவர்களுக்கு மட்டுமல்ல, அமெரிக்கர்களுக்கும் எரிச்சலையூட்டிவருவது வெளிப்படையாகியுள்ளது.

ஆம், நூற்றுக்கணக்கான அமெரிக்க செவிலியர்கள், கனடாவை நோக்கித் திரும்பிவருகிறார்கள்.

அமெரிக்காவில், பொதுமருத்துவம், காப்பீடு, மற்றும் மருத்துவ ஆய்வுகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவிகளை கணிசமாக குறைத்துவிட்டார் ட்ரம்ப்.

இந்நிலையில், ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஒரு பயங்கர சம்பவம் நடந்தது.

மினியாபோலிஸ் என்னுமிடத்தில், ட்ரம்பின் புலம்பெயர்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருந்தது.

அப்போது, ட்ரம்பின் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒரு பெண்ணை நெட்டித் தள்ள, கீழே விழுந்த அவரை அலெக்ஸ் ப்ரெட்டி என்னும் செவிலியர் காப்பாற்ற முயன்றுள்ளார்.

அவரை சுட்டுக் கொன்றுவிட்டார்கள் ட்ரம்பின் அதிகாரிகள்.

அத்துடன், அவருக்கு உள்ளூர் தீவிரவாதி என ட்ரம்ப் நிர்வாகம் பெயரிட, நடந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் எடுத்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவ, மக்களுக்கு உண்மை புரிந்தது.

ஆக, பலருக்கும் அந்த சம்பவம் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

ஆக, ட்ரம்பின் நடவடிக்கைகள் பிடிக்காத அமெரிக்க செவிலியர்கள் நூற்றுக்கணக்கானோர் கனடாவை நோக்கித் திரும்பத் துவங்கியுள்ளார்கள்.

குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மட்டுமே சுமார் 1,000 அமெரிக்க செவிலியர்கள் பணி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இப்படி நூற்றுக்கணக்கான அமெரிக்க செவிலியர்கள் கனடாவை நோக்கி படையெடுக்கத் துவங்கியுள்ள நிலையில், உண்மையில், அமெரிக்காவிலேயே 2028 வாக்கில் 270,000க்கும் அதிகமான செவிலியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆக, ட்ரம்ப் ஆதரவாளர்கள் சிலர் அவரது நிர்வாகத்தை புகழ்ந்துவரும் நிலையில், அமெரிக்காவிலேயே செவிலியர்களுக்கான தேவை இருந்தும், வேலை வாய்ப்புக்கான வழி இருந்தும், அமெரிக்க செவிலியர்கள் கனடாவை நோக்கித் திரும்பி வருவது, ட்ரம்ப் நிர்வாகம் எப்படி உள்ளது என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.