;
Athirady Tamil News

அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நீதி கோரி ஊர்காவற்துறையில் போராட்டம்

0
யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது 
கடந்த 10ஆம் திகதி தமது கட்டளையை மீறி சென்ற ஹயஸ் ரக வாகனம் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் , வாகனத்தை செலுத்திய 17 வயதான வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த அருள் பயஸ் எனும் சிறுவன் உயிரிழந்துள்ளான்.
குறித்த சம்பவம் நடைபெற்று ஒரு மாத காலம் கடந்துள்ள நிலையிலும் , துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு , சிறுவனின் உயிரை போக்கிய பொலிஸார் மீது குறைந்தபட்ச விசாரணைகளை கூட போலீசார் மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குறித்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றுக்கு அருகில் போராட்டத்தை முன்னெடுத்த வேளை , நீதிமன்ற நடவடிக்கைகளை குழப்பம் விதமாக இப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட முடியாது என பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எச்சரித்து , அங்கிருந்து வெளியேற்றினர்.
அதனை அடுத்து போராட்ட காரர்கள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையம் முன்பாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அதேவேளை சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நாளை மறுதினம் வியாழக்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.