;
Athirady Tamil News

உடலில் 30க்கும் மேற்பட்ட காயங்கள் ; ஜேர்மனி பெண்ணுக்கு தொல்பொருள் திணைக்கள ஊழியர் செய்த செயல், நீதிமன்றில் அதிரடி

0

அநுராதபுரம், மிஹிந்தலை ரஜமஹா விகாரையைப் பார்வையிடச் சென்ற ஜெர்மன் நாட்டு இளம் யுவதியொருவரைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தொல்பொருள் திணைக்கள ஊழியரை, எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்போது, ஜெர்மன் நாட்டு யுவதியின் உடலில் 30-க்கும் மேற்பட்ட காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் கஹட்டகஸ்திகிலிய பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்பதும், அவர் மிஹிந்தலை தொல்பொருள் திணைக்கள அலுவலகத்தில் பணியாற்றி வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

சுற்றுலாப் பயணமாக இலங்கை வந்துள்ள குறித்த ஜெர்மன் நாட்டு யுவதி, அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளிலுள்ள புனித தலங்களைப் பார்வையிடுவதற்காகச் சென்றுள்ளார்.

மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் ‘கந்தக சைத்திய’ பகுதிக்குச் செல்லும் வழியில் அமர்ந்து அவர் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்த வேளையில், சந்தேகநபர் எதிர்பாராத விதமாகப் அவரைப் பலவந்தமாகப் பிடித்துத் துன்புறுத்தியுள்ளார்.

அச்சமயம் விகாரைக்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் அங்கிருந்த சிவில் பாதுகாப்புப் படையினர் உடனடியாகச் செயற்பட்டு சந்தேகநபரைத் தப்பவிடாமல் பிடித்தனர். பாதிக்கப்பட்ட யுவதியைக் காப்பாற்றிய அவர்கள், சந்தேகநபரை மிஹிந்தலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பாதிக்கப்பட்ட யுவதியும் சந்தேகநபரும் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்போது, ஜெர்மன் நாட்டு யுவதியின் உடலில் 30-க்கும் மேற்பட்ட காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

அத்துடன், இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட சந்தேகநபர் அந்தச் சமயத்தில் கேரள கஞ்சா போதையில் இருந்தமையும் மருத்துவ அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.