கல் ஓயா ஆற்றுப் பகுதியில் கசிப்புடன் ஒருவர் கைது
அம்பாறை தலைமையக பொலிஸாரின் ஊழல் தடுப்புப் பிரிவினரால் கல் ஓயா பாலத்திற்கு அடியில் பணப்பரிமாற்றம் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கல் ஓயா ஆற்றுப் பகுதியில் செங்கல் உற்பத்தி நிலையம் (செங்கல் வாடி) என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்டு வந்த பாரிய அளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் போது அம்பாறை சேனநாயக்கபுர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சுமார் 90,000 மில்லி லீட்டர் கோடா மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த நபர் செங்கல் அறுக்கும் பணியில் ஈடுபடுவது போல் நடித்து, அதன் மறைவில் நீண்டகாலமாக கசிப்பு காய்ச்சும் தொழிலை முன்னெடுத்து வந்துள்ளார்.என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாவது,