மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் பலி
பதுளை ஹாலி-எல, உடுவர பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனது வயல் நிலத்திற்கு சட்டவிரோதமான முறையில் இழுத்திருந்த மின்சாரக் கம்பியில் சிக்கியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் 60 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஹாலி-எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.