பேண்ட் பாக்கெட்டில் பாம்பை வைத்து டீக்கடைக்கு வந்த தொழிலாளி வேறொருவருக்கு எடுத்து காண்பித்தபோது கடித்தது
மலப்புரம்,
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அமிதுல் இஸ்லாம் (வயது 28). தொழிலாளி. இவர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் தங்கி வேலை செய்து வருகிறார். அவர், ஒரு பாம்பை தனது பேண்ட் பாக்கெட்டில் சுருட்டி வைத்துக் கொண்டு ஒதாயி பகுதியில் உள்ள டீக்க டைக்கு நடந்து சென்றார். பின்னர் அந்த கடையில் அமர்ந்து டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அமிதுல் இஸ்லாம் அருகே இருந்த ஒருவரிடம், தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த பாம்பை வெளியே எடுத்து காண்பித்தார்.