;
Athirady Tamil News

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் 27,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

0

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, 27,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த நிலையம் இன்று (23) பிற்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 6,907 குடும்பங்களைச் சேர்ந்த 27,419 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தத்தினால் 6 மாவட்டங்களில் உள்ள 34 பிரதேச செயலாளர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு உயிரிழப்பும் பதிவாகியுள்ளது.

மேலும், 2 வீடுகள் முழுமையாகவும், 807 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.