;
Athirady Tamil News

மேற்காசிய போர் காரணமாக வங்கதேசத்தில் மின் கட்டணம் 16% உயர்வு!

0

மேற்காசிய போர் காரணமாக வங்கதேசத்தில் மின் கட்டணத்தை 16% உயர்த்தி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

வங்கதேசத்தில் கிட்டத்தட்ட 17 கோடி மக்கள் வாழ்கின்றனர். இந்நாடு எரிபொருள் தேவைக்குப் பெரும்பாலும் இறக்குமதியையே சார்ந்துள்ளது.

கடந்த ஏப்ரலில் பணவீக்கம் 9.04% ஆக இருந்த நிலையில், பொருளாதார அழுத்தத்தைக் குறைக்கும் விதமாக மின் கட்டணத்தை 16% உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது மேற்கொண்டு அந்நாட்டு அரசு சுமையை ஏற்றியுள்ளது.

இரு நாள்களுக்கு முன் மண்எண்ணெய் விலை வங்கதேச ரூபாயில் 130-ல் இருந்து 135 டாகா ஆகவும், பெட்ரோல் விலை 135 இல் இருந்து 140 டாகா ஆகவும் உயர்த்தியிருந்த நிலையில் தற்போது மின் கட்டணத்தை 16% உயர்த்துவதாக வங்கதேச எரிபொருள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரான ஜலால் அகமது அறிவித்துள்ளார்.

வங்கதேச அரசின் மின் மேம்பாட்டு வாரிய தகவலின்படி, மொத்த மின் உற்பத்தித் திறனில் இயற்கை எரிவாயுவிலிருந்து சுமார் 44%, நிலக்கரியிலிருந்து 24 %, எண்ணெய் மற்றும் டீசலிலிருந்து 24%-ம் கிடைப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். வங்கதேசத்தின் முதல் அணு சக்தி உற்பத்தி நிலையமும் விரைவில் செயல்படத் தொடங்கும் நிலையில் உள்ளது.

கோடைக் காலத்தில் அதிகளவு மின் தேவை அதிகரிப்பதால் அங்குள்ள கிராமப்புறங்களில் அதிகளவு மின் தடை ஏற்பட்டன. ஆனால், தலைநகர் தாக்கா மற்றும் பிற முக்கிய நகரங்களில் மின் தடை ஏற்படுவது பெரும்பாலும் தவிர்க்கப்பட்டுள்ளன.

ஈரான் போர் காரணமாக ஏற்பட்ட எரிபொருள் தொடர்பான பிரச்னைகளைச் சமாளிக்க உலக நாடுகளிடம் சுமார் 2 பில்லியன் டாலர் கடனைப் பெற வங்கதேசம் கோரிக்கை வைத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.