;
Athirady Tamil News

இலங்கையில் பராமரிப்பு நிலையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

0

நாட்டில் உரிய தரநிலைகளைப் பின்பற்றாத முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.

முதியோர் பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குபடுத்த புதிய விதிமுறைகள் தயாரிக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

அதோடு பதிவு செய்யப்படாத நிலையங்களில் முதியோர்களை தங்க வைப்பதைத் தவிர்க்குமாறும், தரமற்ற முதியோர் இல்லங்களுக்கு இனி அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் உபாலி பன்னிலகே வலியுறுத்தினார்.

ஹொரண அ்ங்குருவாதொட்ட முதியோர் இல்லத் தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தமை பெரும் தியரத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில், அ்ங்குருவாதொட்ட, படகொட கல்பாத்த ‘மவ்பிய செவண’ முதியோர் இல்ல நிர்வாகம் தொடர்பில் பலரும் அடுக்கடுக்காக குற்றம் சுமத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.