மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளராக ஜெளபருடன் புதிய நிருவாகம் தெரிவு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனைப் பிராந்திய புதிய மத்திய குழுவைத் தெரிவு செய்யும் நிகழ்வு நேற்று (07)ஆம் திகதி அட்டாளைச்சேனையிலுள்ள லொயிட்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
செயலாளராக சமூக சேவையாளரான ஜனாப் எஸ். ரஹீம் (சஃபான்) தெரிவு செய்யப்பட்டதுடன், தேசிய பாடசாலை நூலக உதவியாளரான ஜனாப் ஏ.எல். ஜனூஸ் உப செயலாளராக தெரிவு செய்யப்பட்டார்.
