சம்மாந்துறை பிரதேச தவிசாளருக்கு எதிராக உறுப்பினர்கள் போர்கொடி
video link-
https://fromsmash.com/
பெண்களை பாரபட்சமாக நடாத்துவதுடன் எம்மால் திட்டமிட்டு வழங்கப்படும் அபிவிருத்தி நிகழ்வுகளை புறக்கணிப்பு செய்வதாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் ஒரு வருட நிறைவினை முன்னிட்டும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளராக செயற்படும் ஐ.எல்.எம். மாஹிர் தொடர்பிலான செயற்பாடுகளையும் முன்னிறுத்தி சபை அமர்விலிருந்து வெளிநடப்பு செய்த சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் விசேட செய்தியாளர் சந்திப்பினை சம்மாந்துறை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் செவ்வாய்க்கிழமை(9) மாலை நடாத்திய வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
அங்கு கருத்து தெரிவித்த அவர்கள்
நீங்கள் இம்முறை எனது ‘பட்ஜட்’ இற்கு ஆதவரவளிக்கவில்லை; ஆகையால் இந்த விடயம் சம்பந்தமாக பேச நீங்கள் அருகதையில்லை’ – என சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் நேரடியாக மறுத்ததாக பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.அத்துடன் பெண்கள் வலுவூட்டல், கௌரவிப்பு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து தவிசாளரிடம் அனுமதி கோரிய போதே இவ்வாறு மறுத்தார்.இது மாத்திரமன்றி சம்மாந்துறை பிரதேச சபையின் நிர்வாகம் முற்றிலும் தோல்வி கண்டுள்ளது : தவிசாளர் தன்னிச்சையாக செயற்படுகிறார்.சபையில் முன்வைக்கப்படும் தீர்மானங்கள் காகிதத்தில் மட்டுமே இருக்கின்றன. அபிவிருத்திக்கான நிதி இல்லை என்ற காரணம் கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைக்கும் முன்மொழிவுகள் புறக்கணிக்கப்படுகின்றன.
மேலும் பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் ஜனநாயக முறையிலும் உள்ளூராட்சி சட்ட விதிகளின்படியும் நிறைவேற்றப்படவில்லை. ‘வரவு–செலவுத் திட்டத்தில் என்ன உள்ளடக்கப்பட்டிருந்தது என்பதுகூட உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தப்படவில்லை. அதனால் நாங்கள் அதற்கு எதிராக வாக்களித்தோம். ஆனால் அதன்பின்னர் அரசியல் ரீதியான பழிவாங்கல் இடம்பெற்று வருகிறது என கூறினர்.
இதன் போது செய்யது முகம்மது சித்தி நிலோபா, சஹாப்தீன் நளீம், அகமட் ஐனுன் றிபானா, முகம்மது காசீம் நௌசா, அப்துல் காதர் முகம்மது சஹீல் ,உள்ளிட்ட ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் சார்பான உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
