;
Athirady Tamil News

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

0

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களுக்கு காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, குறித்த கடல் பிராந்தியங்களில் இடைக்கிடையே கடல் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக, குறிப்பிட்ட கடல் பிராந்தியங்களில் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அவதானமாக செயற்படுமாறு கடற்றொழிலாளர்களை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.