ஊர்காவற்துறை கோட்டையின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
ஊர்காவற்துறை கோட்டையின் பாதுகாப்பு, வரலாற்று முக்கியத்துவத்தைப் பாதுகாத்தல் மற்றும் சுற்றுலா மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு, சுற்றுலா அமைச்சின் நிதியுதவியுடன் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் , பிரதேச செயலாளர் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஊர்காவற்துறை கோட்டையை எதிர்காலத்தில் முழுமையாகப் புனரமைத்து, அதன் வரலாற்று மற்றும் தொல்பொருள் முக்கியத்துவத்தைப் பாதுகாத்து, ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாக உருவாக்குவதற்கான விரிவான திட்டமிடல் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்குத் தேவையான முழுமையான வரைபடத் திட்டமிடல் மற்றும் அடுத்தகட்ட புனரமைப்புப் பணிகளுக்கான நிதியைப் பெற்றுக்கொடுக்க, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்தார்.
