;
Athirady Tamil News
Browsing

Gallery

காரைநகர் – ஊர்காவற்துறை பாதை சேவை ஆரம்பம்!! (PHOTOS)

நீண்ட காலமாக பழுதடைந்திருந்த காரைநகர் - ஊர்காவற்துறை இடையிலான பாதை சேவை இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காரைநகர் - ஊர்காவற்துறை இடையில் கடல் பாதை சேவை இடம்பெற்று வரும் நிலையில் அவை அடிக்கடி பழுதடைவதால் , இரு…

புங்குடுதீவு வெற்றிக்கிண்ணம் 2023!! (படங்கள் இணைப்பு)

விருந்தோம்பலுக்கு பெயர்போன கிராமம் புங்குடுதீவு என்பர் ... அதற்கமைய புங்குடுதீவு அனைத்து விளையாட்டு கழகங்களின் ஒன்றியம் நடாத்தும் யாழ் மாவட்ட ரீதியிலான புங்குடுதீவு வெற்றிக்கிண்ணத்தொடரில் கலந்துகொண்ட மூளாய் விக்ரோறி அணி ,…

ஊர்தியை தாடியில் கட்டியிழுத்து சாதனை!! (PHOTOS)

7 நிமிடங்கள் 48 செக்கன்களில் ஆயிரத்து 550 கிலோ கிராம் எடை கொண்ட ஊர்தியை 400 மீற்றர் தூரம் தாடியால் இழுத்து தென்மராட்சி மட்டுவிலைச் சேர்ந்த 59 வயதான செ.திருச்செல்வம் உலக சாதனை படைத்துள்ளார். சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின்…

நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 28ஆம் ஆண்டு நினைவுதினம்…

யாழ்ப்பாணம், நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 28 ஆம் ஆண்டு நினைவுதினம் 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவு கூரப்பட்டது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள்…

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் கடமையினைப் பொறுப்பேற்றார்!…

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக மதிப்பார்ந்த திரு.அருளானந்தம் உமாமகேஸ்வரன் அவர்கள் இன்றைய தினம் (09.07.2023) காலை 8.58 மணிக்கு தனது கடமையினைப் பொறுப்பேற்றார். காலை 8.00 மணிக்கு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு…

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்!! (PHOTOS)

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. கொக்குவில் பொற்பதி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் கூட்டம் இடம்பெற்றது. இலங்கைத் தமிழரசுக்…

யாழ் வண்ணை ஶ்ரீ வீரமாகாளி ஆலய தொண்டர் சபையினால் கல்வி மேம்பாட்டு நலத்திட்டங்கள்!! (PHOTOS)

யாழ் வண்ணை ஶ்ரீ வீரமாகாளி ஆலய தொண்டர் சபையின் நிதிப் பங்களிப்பில் ஆலயச் சூழலிற்கு அருகில் உள்ள பாடசாலைகளில் கல்விகற்கும் பொருளாதாரத்தில் நலிவடைந்த 100 மாணவர்களுக்கு காசோலைகள் நேற்று வழங்கப்பட்டன. ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 9ஆம் திகதி…

வித்தியா நினைவாக புங்குடுதீவில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்!! (படங்கள்)

சூழகம் அமைப்பினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவு மத்திய கல்லூரியின் மாணவி அமரர் சி. வித்தியா அவர்களின் நினைவாக புங்குடுதீவு நசரெத் முன்பள்ளிக்கு ரூபாய் 42000 பெறுமதிமிக்க கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது . குறித்த முன்பள்ளியில் 24…

பொன்னாலை ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலய மஹாகும்பாபிஷேகம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் - பொன்னாலை ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலய நவகுண்ட பக்ஷ சம்புரோக்ஷண புனராவர்த்தன பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம் இன்று(07.07.2023) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

புஷ்பக27 முழு நீளத் திரைப்படம் – குறுந்திரை முன்னோட்டம் வெளியீடு!! (PHOTOS)

புஷ்பக27 முழு நீளத் திரைப்படத்தின் குறுந்திரை முன்னோட்டம் வெளியீட்டு நிகழ்வானது, நேற்றைய தினம் புதன்கிழமை மாலை 06.30 மணியளவில் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் அமைந்துள்ள நித்திலம் கலையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக…

யாழ்ப்பாணம் நல்லூர் கிழக்கு அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய மஹாகும்பாபிஷேகம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் நல்லூர் கிழக்கு அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்டபக்ஷ மஹாகும்பாபிஷேகம் இன்று(06.07.2023) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

வடக்கில் பதிவு செய்யப்படாத தனியார் சுகாதார சேவை துறையினரை பதிவு செய்ய அறிவுறுத்தல்!!…

தனியார் சுகாதாரத் சேவைகள் ஒழுங்குபடுத்தும் சபை கூட்டமானது (Private Health Services Regulatory Council - PHSRC ) வடமாகாண சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை தனியார் சுகாதாரத் சேவைகள் ஒழுங்குபடுத்தும் சபை செயலாளர்…

புங்குடுதீவு மத்திய கல்லூரிக்கு புதிய அதிபர்!! (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு மத்திய கல்லூரியின் அதிபராக வேலணை மண்ணைச் சேர்ந்து திரு. கிருஷ்ணமூர்த்தி வினோதன் அவர்கள் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார் . கடந்த மூன்று மாதங்களாக தற்காலிக அதிபராக திறன்பட செயலாற்றியிருந்தார். தகவல்.. திரு.குணாளன்…

28 ஆண்டுகளாய் மகனின் விடுதலைக்காக போராடிய தாய் இயற்கை எய்தி ஓராண்டு ; மகன் தொடர்ந்தும்…

தமிழ் அரசியல் கைதியாக கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகனது விடுதலைக்காய் போராடி 77 வயதில் ஏமாற்றத்தோடு இறைபதம் எய்திய விக்னேஸ்வரநாதன் வாகீஸ்வரி அன்னையின் முதலாமாண்டு நினைவேந்தல் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது.…

நயினாதீவு விகாராதிபதிக்கு கௌரவிப்பு!! (PHOTOS)

நயினாதீவு ராஜமகா விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரோ நயினாதீவுக்கு வந்து 50 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அவருக்கான கௌரவிப்பு விழா முன்னெடுக்கப்பட்டது. நயினாதீவு மணிமேகலை அரங்கில் இன்றைய தினம் புதன்கிழமை…

மானிப்பாயில் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நான்கு துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்குரிய தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உயரப்புலம் அடைக்கலநாயகி தெருவில் உள்ள காணி ஒன்றில் , அதன் உரிமையாளர் நேற்றைய தினம்…

கிளிநொச்சியில் அரச கரும மொழிகள் வாரத்தினை முன்னிட்டு வீதி நாடகம்!! (PHOTOS)

அரச கரும மொழிகள் நாள் மற்றும் அரச கரும மொழிகள் வாரத்தினை முன்னிட்டு "மொழி" என்கின்ற விழிப்புணர்வு வீதி நாடகம் இன்று(04) செவ்வாய்க்கிழமை சிறப்புற இடம்பெற்றது. அரச கரும மொழிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள…

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த ஆனிப்பொங்கல்!! (PHOTOS)

வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த ஆனிப்பொங்கல் இன்று திங்கட்கிழமை(04) நடு நிசி அதிகாலை 12 மணியளவில் இடம்பெற்றது. இவ் வருட ஆடி குளிர்த்தி பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னரான காலத்தில் முருகப்பெருமானுக்கு…

யாழ்- கோண்டாவில் சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலை இருபதாவது ஆண்டுப் பூர்த்தி விழா!!…

யாழ்ப்பாணம் - கோண்டாவில் சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலை இருபதாவது ஆண்டுப் பூர்த்தி விழா இன்றையதினம் இடம்பெற்றது. சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் கோண்டாவிலில் உள்ள சிவபூமி பாடசாலையில் இன்று…

புங்குடுதீவில் நடைபெற்ற இன்னிசை நிகழ்வும் , நற்பணி செயற்பாடுகளும்!! (படங்கள்)

க. பொ.த. உயர்தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் தோற்றி 3 A சித்திகளை பெற்ற புங்குடுதீவை சேர்ந்த மேரி பவுஸ்ரினா எனும் மாணவியின் உயர்கற்கைக்கு உதவும் நோக்கில் புங்குடுதீவு உலகமையம் அமைப்பின் செயலாளர் திரு. கருணாகரன் குணாளன் அவர்களின்…

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய தீர்த்த திருவிழா!! (PHOTOS)

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் தீர்த்த திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. ஆலயத்தில் காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , நாகபூசணி அம்மனின் , பிள்ளையார் மற்றும்…

யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு அருகில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது!!…

யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு அருகில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு அண்மையில் சட்ட விரோத கசிப்புஉற்பத்தியில் ஈடுபட்ட 28 வயதுடைய அதே இடத்தை…

பாசையூரில் வெடிமருந்துகள் மீட்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் இருந்து வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , யாழ்ப்பாண விசேட பொலிஸ் அதிரடி படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு குறித்த…

யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான உள்நாட்டு விமான சேவை ஆரம்பமாகியுள்ளது!! (PHOTOS)

இரத்மலானையிலிருந்து - யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான உள்நாட்டு விமான சேவை நேற்று (01) ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது. என இரத்மலானை விமான நிலையத்தின் முகாமையாளர் அருண ராஜபக்ஷ ( Aruna Rajapaksha ) தெரிவித்துள்ளார். கொழும்பில் இருந்து ஒரு…

சிறிசேன சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனை சந்தித்து கலந்துரையாடினார்.!! (PHOTOS)

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை நிறைவு செய்துவிட்டு திரும்பும்போது…

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா!! (PHOTOS)

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அதிகாலை 04 மணியளவில் ஆரம்பமான பூஜைகளை தொடர்ந்து காலை 07 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , உள்வீதியுலா…

மைத்திரிபால சிறிசேன யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்!! (PHOTOS)

யாழ்ப்பாணத்துக்கு 3 நாள் விஜயம் செய்துள்ள, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் , முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்றைய தினம் சனிக்கிழமை விஜயம் செய்தார். மைத்திரிபால சிறிசேன அவர்களை போதனா…

யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் இன்று போராட்டம்!! (PHOTOS))

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இம்முறையாவது எமது பிரச்சினைக்கு நீதியை வழங்கவேண்டும் என்று காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்தனர். யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.…

“கூத்தரசன் “ சவிரிமுத்து மிக்கேல்தாஸின் குமரிக்கண்டமும் சங்கத் தமிழும் நூல் வெளியீட்டு…

கூத்துக்கலைச்செம்மல் சவிரிமுத்து மிக்கேல்தாஸ் அவர்களின் ‘குமரிக்கண்டமும் சங்கத் தமிழும் ‘ நூல் வெளியீட்டு நிகழ்வு யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் கடந்த புதன்கிழமை (28) நடைபெற்றது. பேராசிரியர் எஸ். சிவலிங்கராசா தலைமையில்…

கிளிநொச்சி தனியார் கல்வி நிலையங்களின் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்! (PHOTOS)

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள தனியார் கல்வி நிலையங்களுக்கான கலந்துரையாடல் இன்று(30) வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்களின்…

சித்திரவதையிருந்து பாதுகாப்பு எனும் தொனிப்பொருளில் பொலிஸாருக்கு கருத்தரங்கு!! (PHOTOS)

சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்தில் ஏற்பாட்டில் காங்கேசன்துறையில் பொலிஸ் பயிற்சி பாடசாலையிலுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு…

யாழ்.பொது நூலகத்திற்கு விஜயம் செய்த மைத்திரி அப்துல் கலாமிற்கு மரியாதை செலுத்தினார்!!…

யாழ்ப்பாண பொது நூலகத்துக்கு மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை விஜயம் மேற்கொண்டார். யாழ் விஜயத்தின் ஓர் அங்கமாக யாழ் பொது நூலகத்துக்கு சென்று அங்குள்ள நிலமைகளை ஆராய்ந்தார். அதன் போது பொது நூலகத்தில் உள்ள டாக்டர் A.P.J…

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் வேட்டைத் திருவிழா!! (PHOTOS)

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் வேட்டைத் திருவிழா இன்று( 30.06.2023 ) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

அராலி விபத்து – இருவர் உயிரிழப்பு!! (PHOTOS)

யாழ்.நகர் பகுதிக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் - அராலி , வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் இரண்டு…