;
Athirady Tamil News
Daily Archives

17 May 2023

ஜூன் 1-ந்தேதி முதல் ஜனாதிபதி மாளிகையை வாரத்தில் 6 நாட்கள் பார்வையிட அனுமதி!!

ஜனாதிபதி மாளிகை, பொதுமக்கள் பார்வைக்கு ஏற்கனவே திறந்துவிடப்பட்டுள்ளது. பிரதான கட்டிடம், புல்வெளி பகுதி, அசோகா மண்டபம் உள்ளிட்ட பகுதிகள் முதல் பகுதியாகவும், அருங்காட்சியக வளாகம் 2-வது பகுதியாகவும் பிரிக்கப்பட்டு பார்வையிட…

வேலை தேட உதவும் லின்க்டுஇன் நிறுவனத்திலேயே 700 பேர் பணிநீக்கம்!!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் லின்க்டுஇன் தளம் மக்கள் வேலை தேட உதவி வருகிறது. மற்றவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுக்க உதவும் லின்க்டுஇன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 700 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். இந்த முறை விற்பனை, நிர்வாகம்…

நாடு முழுவதும் 2,597 மாநில கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவு: 6 கட்சிகளுக்கு தேசிய…

இந்திய தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மாநில கட்சிகள் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு புது பட்டியல்…

மதுப்பிரியர்களுக்காக அரசிடம் கோரிக்கை !!

மதுபானத்தின் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து மதுக் கொள்வனவு வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே இதைக் கருத்தில் கொண்டு சாமான்ய மக்கள் மலிவு விலையில் மதுவைக் கொள்வனவு செய்ய அனுமதிக்குமாறு நாட்டின் முன்னணி மது உற்பத்தியாளர்கள் அரசாங்கத்திடம்…

சந்தேகநபரை கவனிக்காத இருவர் இடைநீக்கம் !!

ஹெரோய்ன் மில்லிகிராம் 6,500 உடமையில் வைத்திருந்தமை மற்றம் பல பிடிவிறாந்துகள் பிறப்பிக்கப்பட்டிருந்த நபர், தலங்கம பொலிஸாரினால் தலவத்துக்கொட பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார். அவ்வாறு கைது செய்யப்பட்டு பொலிஸ் ஜீப்பில்…

கோட்டா மீது குண்டுத்தாக்குதல்: LTTE பொறியியலாளர் விடுவிப்பு !!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய காலப்பகுதியில், கொள்ளுப்பிட்டி பித்தல சந்தியில் வைத்து தற்கொலைத்தாக்குதல் நடத்தி, அவரை படுகொலைச் செய்வதற்கு சூழ்சிகளை செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் 17 வருடங்கள்…

2024 இலிருந்து இலங்கை பாடசாலைகளில் AI !!

2024 ஆம் ஆண்டிலிருந்து தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய இரு புதிய பாடங்களை இலங்கை பாடத்திட்டத்தில் அறிமுகப் படுத்தவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப்…

மூத்த மகள் வன்புணர்வு: தந்தைக்கு விளக்கமறியல் !!

தன்னுடைய மூன்று மகள்களில் மூத்த மகளான 19 வயது யுவதியை, நீண்ட காலமாக பாலியல் வன்புணர்வு உட்படுத்தி வந்தார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், அந்த யுவதியின் தந்தையான 46 வயதான நபர், கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில்…

அதிகபட்சம் 200MP பிரைமரி கேமரா கொண்ட ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் அறிமுகம் !!

ரியல்மி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரியல்மி 11, ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் என்று மூன்று ஸ்மார்ட்போன்கள் இதில் உள்ளன. இவற்றில் ரியல்மி…

மோடி அரசின் 9-வது ஆண்டு விழாவை ஒரு மாதம் கொண்டாட திட்டம்!!

பிரதமர் மோடி, 2014-ம் ஆண்டு முதல்முறையாக பிரதமராக பதவி ஏற்றார். 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று அந்த ஆண்டில் மே 30-ந்தேதி, தொடர்ந்து 2-வது தடவையாக பிரதமராக பதவி ஏற்றார். வருகிற 30-ந்தேதியுடன் அவர் ஆட்சி பொறுப்பேற்று 9…

இமானுவேல் ஆனோல்ட் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.!!

யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார். மேலும் குறித்த வழக்கு எதிர்வரும் ஜுலை 17ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தனது…

யாழ்.வரணி மத்திய கல்லூரியின் வகுப்பறைக் கட்டடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டது.!! (PHOTOS)

யாழ்.வரணி மத்திய கல்லூரியின் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வகுப்பறைக் கட்டடத் தொகுதி இன்று (17) பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கட்டடத் தொகுதி, வரணி ஒன்றியத்தின் 5 மில்லியன் ரூபா நிதியுதவியில்…

வாட்ஸ்அப் நிறுவனம் மைக்ரோபோனை பயன்படுத்திய விவகாரம் – இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது…

வாட்ஸ்அப் செயலி பயனர்களின் ஸ்மார்ட்போன் மைக்ரோபோனினை இயக்கியதாக எழுந்த சர்ச்சையில் அரசு விசாரணை நடத்தும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். பயனர் தனியுரிமை விவகாரத்தில் இதுபோன்ற செயலை…

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம்!!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று (17) பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று முற்பகல் புதிய ஆளுநர்கள் பதவிப் பிரமாணம் செய்து…

முதல்-மந்திரி பதவி: சித்தராமையா, டி.கே.சிவக்குமாருடன் 90 நிமிடங்கள் நீடித்த…

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் அமோக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த நிலையில் முதல்-மந்திரி பதவியை பிடிப்பதில் டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையா இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இருவரும் டெல்லி சென்றுள்ள நிலையில்…

யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் யாழ்ப்பாண பொலிஸாரினால் இன்று கைது!!

யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் யாழ்ப்பாண பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக…

அசத்தல் அம்சங்கள் நிறைந்த ஆண்ட்ராய்டு 14 – எந்தெந்த போன்களுக்கு கிடைக்கும் தெரியுமா?…

கூகுள் நிறுவனத்தின் I/O 2023 நிகழ்வில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்புகளில் ஒன்று ஆண்ட்ராய்டு 14 ஒஎஸ். ஆனால் இதை பற்றி கூகுள் பெரிதாக எதையும் கூறவில்லை. மாறாக புதிய ஒஎஸ் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகும் என்று மட்டும் அறிவித்தது.…

வருமான வரி இணையத்தை முடக்கி ரூ.3½ கோடியை சுருட்டிய கம்ப்யூட்டர் என்ஜினீயர்!!

பெங்களூருவில் வருமான வரித்துறை இணையதளத்தை முடக்கி பல கோடி ரூபாயை மர்மநபர்கள் சுருட்டி இருப்பதாக சைபர் கிரைம் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து சி.ஐ.டி.…

சர்க்கரைக்கு மாற்று பொருளை பயன்படுத்தாதீர்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

நீரிழிவு நோயாளிகள் பலரும் சர்க்கரை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதால் அதற்கு மாற்றான பொருட்களை (ஸ்வீட்னர்கள்) பயன்படுத்துகிறார்கள். ஆனால் சர்க்கரைக்கு மாற்றான பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை மணி…

பிரதமர் மோடி ‘வேலைவாய்ப்பு திருவிழா’ நடத்தியதை கிண்டல் செய்த ஜெய்ராம் ரமேஷ்!!

பிரதமர் மோடி 'வேலைவாய்ப்பு திருவிழா' நடத்தியதை கிண்டல் செய்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- 'வேலைவாய்ப்பு திருவிழா' மூலம் அரசு நிர்வாகத்தை…

டுவிட்டர் புதிய சிஇஒ லிண்டா யாக்கரினோ – எலான் மஸ்க் அறிவிப்பு!

டுவிட்டர் நிறுவன தலைவர் எலான் மஸ்க் தனது சமூக வலைதள நிறுவனத்திற்கு புதிய தலைமை செயல் அதிகாரியை நியமனம் செய்து விட்டதாக அறிவித்து இருந்தார். மேலும் புதிய சிஇஒ பெண் என்று மட்டும் கூறி, அவர் யார் என்பது பற்றி எந்த தகவலும் வழங்கவில்லை. இதைத்…

சர்ச்சைக்குரிய போதகரின் விசேட அறிவிப்பு !!

ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இலங்கை வரவுள்ளதாக சர்ச்சைக்குரிய பிரசங்கங்களை வழங்கிய கிறிஸ்தவ மத போதகர் ஜெரம் பெர்னாண்டோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “வணக்கம் குடும்பத்தினரே, நீங்கள் அனைவரும் அறிந்தது போல, நான் முன்பு…

904 பில்லியன் ரூபாய் நிலுவையில் உள்ளது !!

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு 2022 டிசெம்பர் 31ஆம் திகதி வரை கிடைக்க வேண்டிய நிலுவையான வரி, தண்டப்பணம் மற்றும் வட்டியின் பெறுமதி 904 பில்லியன் ரூபாய் என்று அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) புலப்பட்டது. இந்தத்…

டொக்டர் ஷாபியின் கைது நியாயமானது !!

குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் ஷாபி ஷிஹாப்தீனை கைது செய்வதற்கு நியாயமான காரணம் இருந்ததால், அவர் கைது செய்யப்பட்டிருப்பது நியாயமானது என்றும் அவரது அடிப்படை உரிமைகள் மீறப்படவில்லை என்றும் உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித்…

முதியவர்களுக்கான தனிச்சிறப்பான இட மாற்று சிகிச்சை பராமரிப்பின் பயன்கள்!!

இந்தியாவில் முதியவர்களுக்கு, குறிப்பாக அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய காலம் மற்றும் நோயிலிருந்து மீண்டு குணமடையும் காலம் ஆகிய சூழலில் இட மாற்று பராமரிப்பு சேவை என்பது, சிகிச்சையின் ஒரு அத்தியாவசிய அங்கமாக இருக்கிறது. மருத்துவமனையில்…

பிரதமர் மோடி ஜப்பான் உள்பட 3 நாடுகளுக்கு பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 19-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 6 நாட்களில் ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். பிரதமரின் இந்த பயணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய வெளியுறவு…

அதிரடியாக வந்த பொலிஸார்; தப்பி ஓடிய ATM கொள்ளையர்கள் !!

ஹம்பாந்தோட்டை வீரவில நகரில் பொருத்தப்பட்டிருந்த அரச வங்கிக்கு சொந்தமான ATM இயந்திரத்தை உடைத்து பணத்தை திருடும் முயற்சி பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2.50 மணியளவில் பொலிஸாரினால் பொருத்தப்பட்டிருந்த அவசர சமிக்ஞை…

ஒரே நாளில் 400 டெங்கு நோயாளர்கள் !!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் 412 டெங்கு நோயாளர்கள் நேற்று முன்தினம் (15) பதிவானதாக தேசிய டெங்கு ஒழிப்பு…

புதிய ஆளுநர்கள் நியமனம் இன்று !!

வடக்கு, கிழக்கு மற்றும் வட மேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று நியமிக்கப்படவுள்ளனர். வடக்கு, கிழக்கு, மேல், வட மேல், சபரகமுவ மற்றும் ஊவா மாகாண ஆளுநர்களைப் பதவி விலகுமாறு ஜனாதிபதி அலுவலகம் அறிவுறுத்தியதாக அண்மையில் தகவல்கள்…

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி !!

பதவிய, புல்மோட்டை ஆறாம் கட்டை மஹசென்புர பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 38 வயதான ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்…

வடபகுதியில் கறுவா செய்கையை ஊக்குவிக்கும் முகமாக அது குறித்த விளக்க செயலமா்வு!!

வடபகுதியில் கறுவா செய்கையை ஊக்குவிக்கும் முகமாக அது குறித்த விளக்க செயலமா்வு ஒன்று எதிா்வரும் மே 20 ஆம் திகதி சனிக்கிழமை வட்டுக்கோட்டை பங்குரு முருகன் கோவில் சமூக மண்டபத்தில் நடைபெறவிருக்கின்றது. காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி…

வெள்ளைவான் புரளியால் வாகனம் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டதுடன், மூவர் காயம்!! (PHOTOS)

வெள்ளைவான் புரளியால் வாகனம் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் வை எம் சி ஏ வீதியில் பொருட்கள் விற்பனை செய்வதற்காக சென்ற…

யாழில் ஓய்வுபெற்ற ஆசிரியர் தீயில் எரிந்து மரணம்!!

யாழ்ப்பாணம், கோப்பாய் வடக்கு கட்டுப்பலானை பகுதியில் கார்த்திகேசு திருப்பதி (65) எனும் ஓய்வு பெற்ற ஆசிரியர் தனக்குத்தானே தீமூட்டி உயிரை மாய்த்துள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டம் பெற்ற இவர் கோப்பாய் கிறீஸ்தவ கல்லுாரியில் நீண்ட…

தமிழகத்தை உலுக்கிய கள்ளச்சாராய உயிரிழப்புகள்… தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!!

விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் பலியாகினர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் எத்தனால் கலந்த சாராயம் குடித்த 5 பேர் உயிரிழந்தனர். இந்த…