;
Athirady Tamil News

செஞ்சோலை குடும்ப உறவுகளுக்கு, “ராஜா ரதீஸ் திருமண நாளை” முன்னிட்டு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள் & வீடியோ)

0

செஞ்சோலை குடும்ப உறவுகளுக்கு, ராஜா ரதீஸ் திருமண நாளை முன்னிட்டு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள் & வீடியோ)

கனடா ராஜா ரதீஸ் திருமணநாளை முன்னிட்டு செஞ்சோலை குடும்ப உறவுகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது..-மாணிக்கதாசன் நற்பணிமன்றம்.
##############################

கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவுகளான புங்குடுதீவைச் சேர்ந்த உதயராஜா ரதீஸ்வரி தம்பதிகளின் திருமண நாளை முன்னிட்டு, இன்றையதினம் செஞ்சோலை குடும்ப உறவுகளுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

தாயகத்தில் யுத்தகாலத்தில் செஞ்சோலை சிறுவர் இல்லங்களில் வளர்ந்த பிள்ளைகள் தற்போது திருமணம் முடித்து குடும்பங்களாக குழந்தைகளோடு வவுனியாவில் பல்வேறு கிராமங்களில் பலதரப்பட்ட சவால்களுக்கு முகம் கொடுத்தவண்ணம் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

குறிப்பாக நிரந்தர தொழில் இல்லாமலும், வீட்டு வசதி இல்லாமலும், பலவிதமான இன்னல்களுக்கு மத்தியில் வாழும் இவர்களை இனங்கண்டு இவர்களுக்கு “ராஜா ரதீஸ் தம்பதிகளின்” திருமண நாளன்று பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது..

எமது அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட செஞ்சோலை உறவுகள் வந்து உதவிகள் பெற்றுச் சென்றனர். வரமுடியாத சூழ்நிலையில் உள்ள உறவுகளின், கணவர்கள் வந்து உதவிகள் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுக்கு சிறப்பு அதீதியாக ஓய்வுபெற்ற வவுனியா நீர்ப்பாசன பொறியியளாலரும், வவுனியா மணிப்புரம் ஆனந்த இல்லத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், வவுனியா மாவட்ட வடமாகாண சமாதான நீதவான் சங்கத்தின் தலைவருமான கோ.ஸ்ரீஸ்காந்தராஜா அவர்கள் கலந்து கொண்டு, தாயக செஞ்சோலை உறவுகளுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தார். அத்துடன் தன்னுடைய அன்பளிப்பாக கலந்து கொண்ட அனைத்து செஞ்சோலை உறவுகளுக்கும் ரீ.சேட்டுக்களை வழங்கினார்.

வவுனியாவின் கூமாங்குளம், லைக்கா குடியிருப்பு, புளியங்குளம், ஓமந்தை, பறநட்டாங்கல், நெளுக்குளம், கந்தபுரம், மகாறம்பைக்குளம் போன்ற கிராமங்களில் இருந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் அலுவலகத்திற்கு வந்து செஞ்சோலை உறவுகள் உதவி பெற்றுச் சென்றனர்.

நீண்ட தூரத்திலிருந்து பல சிரமங்களை எதிர்கொண்டு குறித்த நேரத்திற்கு செஞ்சோலை உறவுகள் கலந்து கொண்டு உதவிகளைப் பெற்றதுடன் சில தேவையான உதவிகள் தொடர்பாக விண்ணப்பங்கள் தந்துவிட்டு சென்றார்கள்.

கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவுகளான புங்குடுதீவைச் சேர்ந்த உதயராஜா ரதீஸ்வரி தம்பதிகளின் திருமண நாளை முன்னிட்டு, இன்றையதினம் “பல்வேறு விதமான வாழ்வாதார உதவிகளும், கற்றல் உபகரணங்களும்” வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..”

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.

31.01.2021

கனடாவில் வசிக்கும் புங்குடுதீவு “ராஜா ரதீஷ்” திருமண நாளில் வழங்கப்பட்ட, “கற்றல், உலருணவுப் பொதி” வழங்கல்.. (படங்கள்)

ராஜா ரதீஸ் தம்பதிகளின் திருமண நாள் நிகழ்வு, ஆனந்த இல்லத்து அன்னையர்களோடு.. (படங்கள் & வீடியோ)

மறவன்குளம் கிராமத்தில் “ராஜா ரதீஸ் தம்பதிகளின்” திருமண நாளன்று வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.