;
Athirady Tamil News

அமரர் விஜயநாதன் அவர்களின் ஐந்தாமாண்டு நினைவாக, “கல்விக்கு கரம் கொடுப்போம்” நிகழ்வு.. (வீடியோ படங்கள்)

0

அமரர் விஜயநாதன் அவர்களின் ஐந்தாமாண்டு நினைவாக “கல்விக்கு கரம் கொடுப்போம்” நிகழ்வு.. (வீடியோ படங்கள்)
##################################

சுவிஸ் நாட்டில் வசிக்கும் குமாரண்ணை என அழைக்கப்படும் மக்கள் சேவகரும், சமய சமூகத் தொண்டரும், புளொட் சுவிஸ் கிளை உறுப்பினரும், சூரிச் தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான விஜயநாதன் இரட்ணகுமார் அவர்களது தந்தையாரான அமரர் வைத்தியலிங்கம் விஜயநாதன் அவர்களது ஐந்தாமாண்டு நினைவாக அன்னாரது குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில் வவுனியா ஆச்சிபுரத்தில் நாளாந்த கூலி வேலைக்கு செல்லும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மாலைநேர கற்பித்தலுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், யாழ்.உடுப்பிட்டி மற்றும் சுவிஸிலாந்து நாட்டில் வசித்தவரும் சுவிஸில் அமரத்தவம் அடைந்தவருமான “இளைப்பாறிய இலங்கை நீதிமன்ற முதலியார்” அமரர்.வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின், ஐந்தாமாண்டு நினைவாக இவ்வுதவிகள் வழங்கப்பட்டது.

சுவிசில் பலருக்கு வழிகாட்டியாகவும், தோள் கொடுக்கும் தோழனாகவும் இருக்கும் குமாரண்ணை என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் விஜயநாதன் ரெட்ணகுமார் அவர்களது தந்தையாரின் வருடாந்த ஆண்டு நினைவாக தமிழர் தாயகப் பகுதியெங்கும், பல்வேறு சமூகப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வவுனியாவில் மிகவும் பின்தங்கிய கிராமமான ஆச்சிபுரம் கிராமத்தில், எமது “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” சார்பில் குறித்த கிராமத்தின் இணைப்பாளரான செயல்படும் திருமதி மைதிலி அவர்களின் ஏற்பாட்டில் மாலை நேரத்து கற்றலுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு தந்தை மற்றும் பெற்றோர் இல்லாத பிள்ளைகளுக்கு அந்தப் பிள்ளைகளைப் பாதுகாக்கும் உறவினர்கள் பராமரிப்பாளர்கள் கற்றல் உபகரணங்களை பெற்றுச் சென்றனர்.

இதேவேளை திரு.இரட்ணகுமார் குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் இன்னும் பல்வேறு விதமான “கல்விக்கு கரம் கொடுப்போம், வாழ்வாதார உதவிகள்” நிகழ்வுகள் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தால்” தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஆத்ம சாந்திக்காக, அவரது குடும்பத்தினர், உறவுகளுடன் இணைந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” இறைவனை வேண்டுகிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.

25.03.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.