;
Athirady Tamil News

அமரர்களான கந்தையா, சீதேவன்பிள்ளை நினைவாக, ஆடி அமாவாசை விரத உதவி (வீடியோ படங்கள்)

0

அமரர்களான கந்தையா சீதேவன்பிள்ளை நினைவாக ஆடி அமாவாசை விரத உதவி
##########################
ஆடி அமாவாசை விரத நாளான இன்று அமரர்களான கந்தையா சீதேவன்பிள்ளை ஆகியோரின் நினைவாக உதவி கோரிய உறவுகளுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் உலருணவுப் பொதிகள் மாலை நேரத்தையும் பொருட்படுத்தாமல் வழங்கி வைக்கப்பட்டது.

மிகவும் இக்கட்டான நிலையில் வாழும் குடும்பங்களுக்கு உடனடியாக உலருணவுப் பொதிகள் வழங்க முடியுமா? என மாலை நேரத்தில் கேட்டு கொண்டதற்கிணங்க, உடனடியாக உலருணவுப் பொதிகள் மட்டுமல்லாது பொருத்தமான வாழ்வாதார உதவிகளையும் வழங்கி வைக்கும்படி சுவிஸ் பேர்ண் பிறம்காடன் என்னுமிடத்தில் வசிக்கும் கந்தையா குணரட்ணம் அவர்கள் உடனடியாக குறித்த உதவிக்கான வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கு தமது தந்தையரான கந்தையா தாயாரான சீதேவன்பிள்ளை நினைவாக ஆடி அமாவாசை விரதத்தினை முன்னிட்டு வழங்கி வைக்கும்படி மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் கேட்டுக் கொண்டார்..

மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் உடனடியாக சுவிஸ்வாழ் தமிழுறவான கந்தையா குணரட்ணம் அவர்கள் தனது பெற்றோரான அமரர்கள் கந்தையா சீதேவன்பிள்ளை ஆகியோரின் நினைவாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திக்கு வழங்கிய நிதியில் ஒரு பகுதியை வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதியை மாலை நேர கறுக்கல் என எதனையும் பாராது அவசர உதவி கேட்டோரின் இல்லம் சென்று உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

ஏனைய உதவிகள். வழங்க நேரமில்லாத காரணத்தை நிதிப்பங்களிப்பு செய்தோர் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகின்றோம். இருப்பினும் இன்னும் ஒரிரு நாட்களில், கோழிகளுடன் கூடிய கோழிக்கூடு போன்ற வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்படவுள்ளது.

யாழ். மாவிட்டபுரம் இடத்தைச் சேர்ந்தவரும், சுவிஸில் பேர்ண் பிரேம்கர்டேன் இடத்தில் வசிக்கும் திரு.கந்தையா குணரெட்னம் அவர்கள் தனது பெற்றோரான அமரர்கள். கந்தையா சீதேவன்பிள்ளை ஆகியோரின் நினைவாக “ஆடி அமாவாசையை” முன்னிட்டு அவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி வழங்கிய வாழ்வாதார உதவிகளுக்காக, சுவிஸ்வாழ் உறவான கந்தையா குணரட்ணம் அவர்களுக்கு தாயக உறவுகளோடு இணைந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளும் அதேநேரம் அமரத்துவமடைந்த கந்தையா சீதேவன்பிள்ளை ஆகியோரின் ஆத்மசாந்திக்காக எல்லாம்வல்ல இறைவனை மாணிக்கதாசன் நற்பணி மன்றம் வேண்டி கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

08.08.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.