;
Athirady Tamil News

புங்குடுதீவு “அமரர் சி.சரவணபவன்“, “அமரர் சி.சிவராஜா“ ஆகியோரின் நினைவாக “வாழ்வாதார உதவிகள்” வழங்கல்.. (படங்கள், வீடியோ)

0

புங்குடுதீவு “அமரர் சி.சரவணபவன்“, “அமரர் சி.சிவராஜா“ ஆகியோரின் நினைவாக “வாழ்வாதார உதவிகள்” வழங்கல்.. (படங்கள், வீடியோ)

புங்குடுதீவைச் சேர்ந்தவரும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்து அமரத்துவமடைந்தவருமான அமரர். சரவணபவன் சின்னத்துரை அவர்களின் முதலாமாண்டு திதி நாள் நினைவாக; அவரது மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவுகள் சார்பாக அன்னாரின் அன்புத்தம்பி குடும்பமான திரு.திருமதி. சி. இலக்ஸ்மணன் லலிதா மற்றும் பெறாமக்கள் லாவண்யா, லக்சனா, லவன் ஆகியோர் வழங்கிய நிதிப் பங்களிப்பில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக கடந்தவாரம் முதல் நிகழ்வாக வாழ்வாதார உதவியாக பெறுமதியான உலருணவுப் பொதிகளும், பயன்தரு தென்னைமரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே.

அதேபோல் புங்குடுதீவைச் சேர்ந்தவரும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்து அமரத்துவமடைந்தவருமான அமரர். சிவராஜா சின்னத்துரை அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவாக; அவரது மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவுகள் சார்பாக அன்னாரின் அன்புத்தம்பி குடும்பமான திரு.திருமதி. சி. இலக்ஸ்மணன் லலிதா மற்றும் பெறாமக்கள் லாவண்யா, லக்சனா, லவன் ஆகியோர் வழங்கிய நிதிப் பங்களிப்பில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக கடந்தவாரம் முதல் நிகழ்வாக வாழ்வாதார உதவியாக பெறுமதியான உலருணவுப் பொதிகளும், பயன்தரு தென்னைமரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே.

இதனைத் தொடர்ந்து இன்றையதினம் அமரர்களின் அன்புத்தம்பி குடும்பமான திரு.திருமதி. சி. இலக்ஸ்மணன் லலிதா குடும்பத்தினர் வழங்கிய நிதிப் பங்களிப்பில் மேலதிகமான நிதியையும், வாழ்வாதார உதவிகளை வழங்கி வைக்குமாறு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் கேட்டுக் கொண்டதுக்கு இணங்க, வன்னி எல்லைக் கிராமமொன்றில் இன்றையதினம் “அரிசிப் பொதிகளும், அமாரர்களின் நினைவாக பயன்தரு தென்னைமரக் கன்றுகளும்” வழங்கி வைக்கப்பட்டது.

அமரத்துவமடைந்த அமரர் சரவணபவன் சின்னத்துரை, அமரர். சிவராஜா சின்னத்துரை ஆகியோரின் நினைவாகவும், அமாரர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் முதலில் அமாரர்களின் திருவுருவப் படத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டு, தேவாரபாராயணம் பாடப்பட்டு பொதுமக்களினால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்றைய நிகழ்வில் பயனாளிகளுடன் இணைந்து அக்கிராமப் பொதுமக்கள் கலந்து கொண்டு இருந்தனர். இன்றைய மேற்படி நிகழ்வில் பெருமளவான கிராம மக்கள் கலந்து கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து நாட்டின் இன்றைய இக்கட்டான பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு உடனடி அத்தியாவசியத் தேவையான அரிசிப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் அமரத்துவமடைந்த அமரர். சி.சரவணபவன், அமரர் சி.சிவராஜா ஆகியோரின் நினைவாக பயன்தரு தென்னைமரக் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டதும் சிறப்பம்சமாகும்.

நாளாந்த வருமானத்தை இழந்து அடுத்தவேளை உணவுக்காக அந்தரப்படும் உறவுகளுக்கு குறிப்பாக பல்வேறு நிலைகளில் நலிவுற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கும், வறுமைக் கோட்டில் வாழும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களை சேர்ந்த சிலருக்கும் வாழ்வாதார உதவியாக அரிசிப் பொதிகளை மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக வழங்கி வைத்தனர்.

மேற்படி நிகழ்வானது “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் அவர்களின் ஒழுங்கமைப்பில், மன்ற கிராமிய ஒருங்கிணைப்பாளர்கள் விருந்தினராகக் கலந்து சிறப்பிக்க நடைபெற்றது.

அமரத்துவமடைந்த அமரர் திரு.சரவணபவன் சின்னத்துரை, அமரர்.திரு.அமரர். சிவராஜா சின்னத்துரை ஆகியோருக்கு தாயக உறவுகளோடு, இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் ஆழ்ந்த இரங்கலோடு “அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி” அஞ்சலி செலுத்துவதோடு

அமரர் திரு.சரவணபவன் சின்னத்துரை, அமரர் திரு. சிவராஜா சின்னத்துரை அவர்களது அந்தியேட்டி நிகழ்வுக்கு நிதிப் பங்களிப்பினை வழங்கிய அன்னாரின் அன்புத்தம்பி குடும்பமான திரு.திருமதி. சி. இலக்ஸ்மணன் லலிதா மற்றும் பெறாமக்கள் லாவண்யா, லக்சனா, லவன் ஆகியோருக்கு பயனாளிகள் மற்றும் தாயக உறவுகளுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.

30.09 2022.

புங்குடுதீவு “அமரர் சி.சரவணபவன்“, “அமரர் சி.சிவராஜா“ ஆகியோரின் நினைவாக “வாழ்வாதார உதவிகள்” வழங்கல்.. (வீடியோ)

புங்குடுதீவு “அமரர் சி.சரவணபவன்“ அவர்களின் முதலாமாண்டு திதிநாள் நினைவாக “வாழ்வாதார உதவிகள்” வழங்கல்.. -வீடியோ-

புங்குடுதீவு “அமரர் சி.சிவராஜா“ அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவாக “வாழ்வாதார உதவிகள்” வழங்கல்.. -வீடியோ-

புங்குடுதீவு “அமரர் சி.சரவணபவன்“ அவர்களின் முதலாமாண்டு திதிநாள் நினைவாக “வாழ்வாதார உதவிகள்” வழங்கல்.. -படங்கள், வீடியோ-

புங்குடுதீவு “அமரர் சி.சிவராஜா“ அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவாக “வாழ்வாதார உதவிகள்” வழங்கல்.. -படங்கள், வீடியோ-

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.