;
Athirady Tamil News

மரம் வெட்டும் இயந்திரத்தினால் வெட்டிக் கொடூர கொலை!

0

இருவருக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவரின் இரு கால்களையும் மரம் வெட்டும் இயந்திரத்தினால் வெட்டியதில் குறித்த நபர் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகி உள்ளது.

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹாங்கொட பிரதேசத்தில் நேற்று (30) பிற்பகல் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பொஹோலியத்த – கலகெதர பகுதியைச் சேர்ந்த 32 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் 54 வயதுடைய கடுகஸ்தோட்டை மஹாங்கொட பகுதியைச் சேர்ந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.