;
Athirady Tamil News

யாழில்.இரத்த வாந்தி எடுத்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

0

யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்த முதியவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நெடுந்தீவை சேர்ந்த இராமநாதன் முத்துலிங்கம் (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார்.

நெடுதீவில் உள்ள தனது வீட்டில் கடந்த 15ஆம் திகதி இரத்த வாந்தி எடுத்துள்ளார். அவரை நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.