;
Athirady Tamil News

வறண்ட கைகளை மிருதுவாக்க!! (மருத்துவம்)

0

*ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி, அதில் விட்டமின் ‘இ’ ஆயிலை கலந்து அந்தக் கலவையை கைகளில் பூசி 10 நிமிடம் கழித்து மசாஜ் செய்து பின் துடைத்திட கைகள் மிருதுவாகும்.

*சமையல் செய்யும்போது காட்டன் கிளவுஸ் அணிந்துகொண்டால், கைகள் வறண்டு சொர சொரப்பாகாமல் இருக்கும்.

*கெமிக்கல் அதிகம் கொண்ட சோப், பவுடரை உபயோகிக்காமல் இருக்க, கைகள் சாஃப்ட்டாக இருக்கும். பாத்திரம் கழுவும் போது கைகளில் கிளவுஸ் அணிந்து கொள்ளலாம்.

*கருப்பான கை மூட்டுகளின் மீது எலுமிச்சை சாற்றில் சர்க்கரை கலந்து மென்மையாக தேய்த்து பின் கழுவி வர கருமை மாறும்.

*பாத்திரம் அல்லது துணிகளை கைகளால் துவைத்த பிறகு தேங்காய் எண்ணெயையோ அல்லது மாய்சரைசிங் கிரீமை தடவினால், கைகள் சொரசொரப்பாகாது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.